என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு ஆலோசனை"
- மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் தற்பொழுது வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து உதிர்ந்து வருகிறது.
- நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியதால் விவசாயி கள் பெறும் வேதனை அடைந்து வருகின்றனர்.
கடத்தூர், ஜூலை.8-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய சுற்றுப்பகுதி கிராமங்களில் பல ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ளனர்.
இந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் தற்பொழுது வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து உதிர்ந்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்து இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியதால் விவசாயி கள் பெறும் வேதனை அடைந்து வருகின்றனர்.
பாப்பி ரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் தோட்டக்கலை துறை அலுவலர் பொன்முத்து, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் சுரேஷ் மற்றும் ஏசுதாஸ், பூபதி, வசந்தி ஆகிய அதிகாரிகள் விவசா யிகளுக்கு தடுப்பு நடவடிக் கைகள் குறித்து ஆலோச னைகள் வழங்கினார்.
இதேபோல்மொரப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி மரவள்ளி கிழங்கு தோட்டங்களில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மரவள்ளி செடிகளில் செம்பேன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் கட்டுப்படுத்தவும் ஆலோச னைகள், தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து எடுத்து ரைத்தார்.
இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். விவசாயிகள் மரவள்ளி கிழங்கில் பாதிப்பு தடுக்கும் வகையில் மற்றும் நோய் பரவாமல் இருக்கும் வகை யிலான மருந்துகளை அந்த அந்த பகுதியில் உள்ள வேளாண்மை துறை அதிகாரி களின் அறிவுரை யின்படி பயன்படுத்தி பயனடைய வேண்டு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்